திங்கள், 12 நவம்பர், 2012

காதல் மரம்!

 
முடியாது என்ற என் சீண்டலில்
மறம் ஏறி
உதடு பறித்தாய்
காதல் மரம் ஏறி !
 
ஒளிந்து, சேர்ந்து, பின் பழுத்து,
காதல் மரத்திற்க்கு கீழே
கொட்டிக் கிடக்கின்றன
பார்வைகளின் பரிமாற்றமும்
சீண்டல்களின் தித்திப்பும்..!
 
நம் காதலை
உலுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது
உணர்வுகளின் தொகுப்பு..!
 
தனியே பிரித்து
பொறுக்கி எடுக்க விரும்பவில்லை
சுகமானவைகளை மட்டும்
அவை அங்கேயே
கிடக்கட்டும்,
உதிர்ந்த பின்னும்
மக்கி உரமாகும்
இலைகளைப் போல…!
 
  - அகன்
 

கருத்துகள் இல்லை: