வெளியே தள்ளி
மனக்கதவை
இறுக தாளிட்டேன்
மனமோ ஒரு நிலையில்
இல்லை
சென்றுவிடுவாயோ என்று
ஒரு புள்ளியில் தோன்றிய பயம்
முழுதாய் ஆக்ரமிக்க,
பதற்றம் தேங்கிய கண்களால்
கதவின் இடுக்கில் பார்க்கிறேன்..
கண்சிமிட்டி சிரிக்கிறாய்..
எதுவும் தோன்றாமல்
காதல் மிகுதியில்
கதவைத் திறந்து
கட்டி அணைத்துக் கொள்கிறேன்..
எந்த நம்பிக்கையில்
எனக்காய் காத்திருந்தாய்?
என்று கேள்வியாய் பார்க்கையில்,
கண்களில் முத்தமிட்டு
"காதல்"
என்றாய்..
- அகன்