வியாழன், 1 நவம்பர், 2012

கதைக்களம்




ஒரு நட்பின் ஆதிப் புள்ளி
ஒரு பிரிவின் துயர இறுதி
ஒரு கொண்டாட்டத்தின் மகிழ்வான தருணம்
விருப்பமிலா உடன்பாட்டின்
ஒரு தொண்டைக் குழி வெறுப்பு
கெஞ்சலையும் கொஞ்சலையும்
நாணமிட்டுத் தூவி
அன்பின் தணலில் உருக்கி
வார்த்தெடுக்கப்பட்ட
ஒரு காதலின் முதல் அத்தியாயம்
பசித்துத் தவித்து உணவுக்கு ஏங்கிய
ஒரு வயிற்றின் குளிர்வு
ஆற்றாமையை வாங்கிச் சுமந்து
ஆசுவாசம் தந்த ஒரு தோள்
ஒரு தனிமையின் மௌனம் எனக்
கதை கதையாய் கொட்டிக்கிடக்கிறது
உணவகத்தின் ஒவ்வொரு மேசை மீதும்.
- நா.அருள்ஜோதியன்
பிரசுரம் : விகடன் சொல்வனம் 24 அக்டோபர் 2012

கருத்துகள் இல்லை: