வெள்ளி, 10 ஜனவரி, 2014

கனவுக்காக....



முதல் கனவில் உன்னை
தொலைத்து...

இன்று
எல்லா  இரவிலும்
கனவைத்தேடுகிறேன்
உன்னை கண்டெடுக்க...

கனவுக்கான  காத்திருப்பில்
தூக்கமற்ற
நீள் இரவுகள்...

ஒரு முறை உறங்கிவிட
அருகில் இருந்துவிடு
கனவுக்காக...

- அகன் 

வியாழன், 9 ஜனவரி, 2014

கண்ணீர் துளி




உனக்கும் எனக்குமான
தூரத்தை
இயல்பாய் கடக்கும் முயற்சியில்
தோற்றது இருவரும்தான்...

விட்டு விலகும்
அந்த நொடியை
தாமதித்திருந்தால்
விலகாமல் இருந்திருப்போமோ...

எல்லாம் இருந்தும்
ஏதோ குறைவாய் தோன்ற,
எது என தேட அவசியமற்று
நீயாகி போகிறாய்.....

ஒரு மூச்சு
தோல் சாய்ந்து
அழுதுவிட மட்டுமாவது
அருகில் இருந்துவிடேன்...

யாருக்கும் தெரியாமல்
கொஞ்சமாய்
வருத்தம் இருக்கையில்
இந்த கண்ணீர்
வந்து காட்டிக்கொடுத்துவிடுகிறது...

உன் தோள் சாய்ந்து அழ
என்னுல்
கண்ணீரும் காரணமும்
சேர்த்துக்கொண்டே இருக்கிறேன்..

உன்னை வெளியேற்றி விட்டேன்,
இருந்தும்
உன் இருப்பை
ஏதோ ஒன்று
நியாபகபடுத்திக் கொண்டே இருக்கிறது

என்னை
பார்வையால் துரத்தாதே,
ஓடுவதற்கு
மனமும் இல்லை
இடமும் இல்லை ........

உன்னை பார்க்க
வளர்த்திருந்த சிறகுகளை
கொஞ்சம் கொஞ்சமாய்
பறித்து கொண்டது காலம்.

 -அகன்